Sunday 1 April 2007

சிட்னி முருகன் தீர்த்தோற்சவம்


மயிலேறி வருகிறார் கந்தவேள்

காவடி எடுக்கும் பீஜி இந்தியர்கள் (முருகக்கடவுளின் தமிழ்ப் பாசுரங்களை ஹிந்தியில் எழுதி வைத்துப் பாடினார்கள்)


நாதஸ்வர மேள முழக்கம்


தீர்த்தக் கரையில் முருகனருள் வேண்டி


தீர்த்தமாடும் (ஆ) சாமிகள்


வரிசை கட்டி நின்ற பக்தர்களும் தண்ணீர் எத்தலில் இருந்து தப்பவில்லை


வெளி வீதி வலம்

முருகப்பெருமான் அருள் யாவருக்கும் கிட்டட்டும்

22 comments:

கார்திக்வேலு said...

"உடனுக்குடன்" என்றால் இதுதான்...அருமை.
கோவில் மண்டபத்தில் வைத்தே பதிந்து விட்டீர்களா..;-)

செல்லி said...

சுடச்சுட தகவல்கள். வண்ணப் படங்களுடன் சண்முகப் பெருமான் பட்டுச்சால்வையுடனும், அழகான அலங்காரத்துடனும் உலா வருந் தரிசனத்தை
என்னவென்று சொல்ல
வார்த்தைக்கெங்கு செல்ல!
மிக்க நன்றி, பிரபா.

கானா பிரபா said...

//கார்திக்வேலு said...
"உடனுக்குடன்" என்றால் இதுதான்...அருமை.
கோவில் மண்டபத்தில் வைத்தே பதிந்து விட்டீர்களா..;-) //

கார்திக்

கோயில் மண்டபத்தில் சாப்பாட்டு நெரிசலுக்குள் வைத்தெல்லாம் போடமுடியாது ;-))

கானா பிரபா said...

வணக்கம் செல்லி

நான் சிட்னி முருகனின் தீர்த்தோற்சவம் பார்த்தது இதுதான் முதல் தடவை. எனக்கும் இந்த அனுபவம் மகிழ்வளிக்கக் கூடியதாக இருந்தது.

குமரன் (Kumaran) said...

அமெரிக்காவிலிருந்து கொண்டு சிட்னி முருகப்பெருமானின் தீர்த்தோற்சவத்தைக் கண்டு களித்தேன். மிக்க நன்றி.

வி. ஜெ. சந்திரன் said...

ஆகா பக்த கோ (கே) டி தான் தப்பாம போய் இருக்கீங்க 3 நாளும்....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மயிலேறி சிட்னியில் வந்த முருகனை - எங்கள்
மனமேறி வருமாறு பதிவேற்றி வந்த பிரபாவுக்கு நன்றிகள்!

நாதசுரக் கலைஞர்கள் சிட்னி வாழ் மக்களா? இல்லை இந்தியா/இலங்கையில் இருந்து வந்த கலைக் குழுவினரா, பிரபா?

கானா பிரபா said...

குமரன், சந்திரன், கண்ணபிரான் ரவிஷங்கர்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

வி.ஜே

முருகன் அருளும் பிரசாத மகிமையும் தானே ஆலயத்தை நோகி இழுத்துவிடும் ;-)

ரவிஷங்கர்

சிட்னியில் உள்ள கோயிலின் நிரந்தர நாதஸ்வரக் கலைஞர்களுடன், ஈழத்தில் பிரபலமான கலைஞர்காளான நாகேந்திரன், சுதா, குழுவினரும் கலந்து சிறப்பித்தார்கள்

வெற்றி said...

கானா பிரபா,
உங்களின் புண்ணியத்தால் சிட்னி முருகனின் சப்பரம், தேர், மற்றும் தீர்த்தத் திருவிழா எல்லாம் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள்.

கானா பிரபா said...

வெற்றி

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
படங்கள் அருமை! முருகனுக்குத் தீர்த்தக் கேணி எப்போ கட்டப் போகிறார்கள்.
ஆ"சாமி" களை எப்படிச் சரியாகக் கண்டுபிடித்தீர்கள்!
வாரவுறுதியில் விழாக்களை அமைக்காமல்; சரியான திகதிகளுக்கு அமைய
அமைப்பது; கேட்கச் சந்தோசமாக இருக்கிறது. அதற்கு விசாலமான கோவில் ஒரு
காரணமெனக் கருதுகிறேன்.
அத்துடன் கோவில் வீதி;கோவிலுடனே அமைந்திருப்பதும்;
இங்கே பொதுத் தெருவை வீதியுலா வரும் வழியாக்குவதாலும்; வருமானமே
பெருநோக்கம் என்பதாலும்; வாரவுறுதியுள்;வர அமைப்பது வழக்கமாக்கி விட்டார்கள்.
நோக்கம் வருமானம் என்பதால் ஆகமவிதிகள் அடிபடுவது பற்றி எவருக்குமே
கவலையில்லை.
இவற்றைப் பற்றிக் கேட்டால் நம்மை விந்தையாகப் பார்ப்பார்கள்.

கானா பிரபா said...

யோகன் அண்ணா

முருகனுக்கு தீர்த்தக் கேணி அமைப்பதை விட தலையாய பிரச்சனை வாகனத் தரிப்பிடம். Double story car park கட்டலாம் எண்டால் அதுவும் முடியாதாம். காரணம் கோயில் கோபுர உயரத்துக்கு மேலே இருக்கக்கூடாதாம்.

(ஆ)சாமிகள் எத்தின எத்தில் என்ர சட்டை தொப்பமா நனைஞ்சு வெள்ளத்தில அகப்பட்ட காகம் போல வந்திட்டன் ;-)

சினேகிதி said...

aha....oor therthiruvillavellam thothidum pola iruke :-))) enkau padangala parka Selvachanathi murugal kovil la theertha thiruvila andu bag la thanni nirapi oosiyla niraya idangalila kuthi vilaaydi ammada adi vaangina gpagamtha varuthu.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி சினேகிதி

கனடாவிலையும் நிறையக்கோயில் இருக்குது தானே?

G.Ragavan said...

படங்கள் மிக அருமையாக வந்துள்ளன. அதென்ன தெப்பக்குளமா? செயற்கையாக உருவாக்கியிருக்கின்றார்களா? அதற்கு எப்படி தண்ணீர் நிரப்புகிறார்கள்?

மயில் மேல் அமர்ந்து துயர்களுக்குத் துயில் கொடுக்கும் முருகனைக் காண அழகோ அழகு!

கானா பிரபா said...

வணக்கம் ராகவன்

இது பிளாஸ்ரிக்கால் ஆன செயற்கைக் குளம் ;-). தண்ணீர்க்குழாய்த் தொடுப்பினால் தற்காலிகமாக நீர் நிறைக்கப்பட்டுள்ளது.

Anonymous said...

நானும் sweden இருந்து கொண்டு சிட்னி முருகப்பெருமானின் தீர்த்தோற்சவத்தைக் கண்டு களித்தேன். மிக்க நன்றி.
"(ஆ)சாமிகள் எத்தின எத்தில் என்ர சட்டை தொப்பமா நனைஞ்சு வெள்ளத்தில அகப்பட்ட காகம் போல வந்திட்டன் ;-
eppi ellam seithal thane unkala vatusaththila otu naal aavathu kulikka pannalam. sidnyila suththam sukathataththajum penalaam....
krishna

கானா பிரபா said...

தம்பி கிருஷ்ணாவுக்கு வாற கிண்டலைப் பாரன். நான் ஒரு நாளைக்கு ரண்டு தரம் நல்லா உரஞ்சிக்குளிக்கிறனான் சரியோ?

உண்மைத்தமிழன் said...

அரோகரா..
கந்தனுக்கு வேல்.. வேல்..
முருகனுக்கு வேல்.. வேல்..
அரோகரா..

Anonymous said...

naan thanpi ella thankachchi....
krishna

கானா பிரபா said...

ஓ மன்னிக்கோணும் தங்கச்சி, இவ்வளவு நாளும் ஆம்பிளைப்பிள்ளை எண்டெல்லோ நினைச்சன்

Haran said...

அரோகரா