Monday, 8 February 2010

ATBC வானொலிக் குடும்ப ஓன்றுகூடல் 2010

அவுஸ்திரேலியாவில் தமிழ்ச்சமூகத்தின் பேராதரவுடன் இயங்கி வரும் 24 மணி நேர சமூக வானொலி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேற்று பெப்ரவரி 7 ஆம் திகதி தனது வருடாந்த வானொலிக் குடும்ப ஒன்று கூடலை வெகு சிறப்பாக நடாத்தியது. வருடா வருடம் கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாகக் கலைநிகழ்ச்சிகளும், நாவுக்கு ருசியாக அறுசுவை உணவும் கலக்க இந்த நிகழ்வு, வானொலியின் பேராதரவு தரும் நேயர்களும் 70 க்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள, நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளடங்கலாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு ஈழத்தின் கொடூரமான போர்ச்சூழல் காரணமாக இந்த நிகழ்வு நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த பெப்ரவரி 7 ஆம் திகதி Bowman Hall, Blacktown என்ற இடத்தில் மாலை 6.05 இற்கு ஆரம்பமாகி இரவு 10 மணி வரை அரங்கு நிறைந்த இருக்கைகளோடு சிட்னியின் மிகப்பிரமாண்டமான இலங்கை இந்திய மளிகைக்கடையான உதயா சுப்பர் மார்ட் ஸ்தாபனத்தாரின் பேராதாரவோடு அரங்கு நிறைந்த இருக்கைகளோடு இனிதே நடந்தேறியது.

இந்த நிகழ்வினை தமிழ் மூத்த குடிமக்களின் பிரதிநிதியாக திரு.நிக்கலஸ் இராஜநாயகம், மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் திரு. மகேசன் (வானொலி மாமா) ஆகியோர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்கள். தொடர்ந்து இளையோர் சமூகத்தில் இருந்து தமிழ்தாய் வாழ்த்து, அவுஸ்திரேலிய தேசிய கீதம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண் ஆகியவை பாடிச் சிறப்பிக்கப்பட்டன.


தாயகத்தில் போரால் கொல்லப்பட்ட இன்னுயிர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மெளன அஞ்சலியோடு முக்கிய நிகழ்வுகளுக்கு நகர்ந்தது. அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், சிட்னியின் பிரபல நடன ஆசிரியையுமான திருமதி கார்த்திகா கணேசரின் மாணவியர் புகழ் பெற்ற திரையிசை நடனங்களை ஜனரஞ்சகமாக வழங்கினர். அவை சிறப்பான நெறியாள்கையோடு கச்சிதமாகக் காண்போர் மனதைக் கவர்ந்தன.

வானொலியின் இயக்குனர்களில் ஒருவரான திரு ஈழலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

வானொலி நிகழ்வுகளில் முன்னோடியாக, அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முழுமையாக ஒரு மணி நேர நிகழ்ச்சியாக "துளிர்" என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கும் சிறுவர்கள் இந்த நிகழ்விலே துளிர் பொது அறிவுப் போட்டி ஒன்றை நடத்திப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்கள். இந்த நாட்டில் பிறந்து தமிழ் கற்றும் வாழும் இப்பிள்ளைகள் முழுமையான தமிழ் அறிவிப்போடு, பார்வையாளர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறார்களை இரண்டு பிரிவாக வைத்து, தமிழ் இலக்கியம், சினிமா, அறிவியல், புவியியல், விளையாட்டு என்று ஒவ்வொரு துறையிலும் கேள்விகளை இருபகுதிக்கும் கேட்டு நடாத்திய இந்தப் போட்டியினை வெகுவாக ரசித்ததோடு சரியான பதில்களை அவர்கள் சொல்லும் போது வயது வேறுபாடின்றிக் கைதட்டி ஆரவாரித்தனர் பார்வையாளர் சமூகம்.

அரங்கில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நேயர்கள் குழுமியிருந்த மேசைகளில் மிக்சர், மென்பானங்கள் போன்றவை வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இந்தப் பணியிலும் வானொலி அபிமானிகள் தாமாக வந்து இணைந்து பங்கேற்றது சிறப்பு.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், அபிமானிகள் இணைந்த சிட்னி கானஸ்வரா இசைக்குழு பழைய, புதிய பாடல்களைப் பாடி ஆடவும் செய்து சிறப்பித்தது. வழக்கமாக இப்படியான பாடல் விருந்துகளுக்குக் கோளாறு பதிகம் படிக்கும் ஒலிவாங்கியும் கட்டுண்டு ஒத்துழைத்தது சிறப்பு. இந்த இடத்தில் நிகழ்வில் முழுமையாக வழங்கப்பட்ட சிறப்பான ஒலித்தரத்தையும் சொல்லி வைக்க வேண்டும்.

சிட்னி கலையகம் 1, சிட்னி கலையகம் 2, மெல்பேர்ண் கலையகம், ரொரொண்டோ கலையகம் என்று அரங்கின் நான்கு மூலைகளிலும் இரவு உணவு பரிமாறும் பகுதிகள் அமைக்கப்பட்டு இடியப்பத்தோடு சைவ அசைவ உணவுகளும் பரிமாறப்பட்டு பாயாசத்தோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

உணவு பரிமாறும் வேளையில் அறிவுக்களஞ்சியம் என்ற பொது அறிவு வினாக்கொத்து வழங்கப்பட்டு நேயர்களின் மூளைக்கு வேலை கொடுக்கப்பட்டது. பெடியள் மொபைல் இன்ர நெட்டில் விடைகளைத் தேடிக் கண்டு பிடித்து எழுதியது சுவாரஸ்யம். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்திடல் வேண்டும் என்று சொன்னவர் யார் என்று கேட்ட கேள்விக்கு யாரோ புண்ணியவான் "பாரதிராஜா" என்று எழுதிவைத்தார் (அவ்வ்வ்வ்)

நிகழ்ச்சிகளை திரு.நவரட்ணம் ரகுராம், மற்றும் திரு செல்லையா பாஸ்கரன் ஆகியோர் தொகுத்து வழங்க அரங்க அமைப்பை திரு சிவசம்பு பிரபாகரனும் நெறிப்படுத்தினார்.
இந்த ஒன்று கூடலின் நிர்வாகத் தயாரிப்பாளராக திரு அலேசியஸ் ஜெயச்சந்திராவும் பொறுப்பேற்றதோடு ஒவ்வொரு பணியிலும் வானொலி அறிவுப்பாளர்களும் தொண்டர்களும் நியமிக்கப்பட்டுத் தம் பணியைச் செவ்வனே செய்தார்கள். மெல்பன் கலையகத்தில் இருந்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திருமதி சாந்தினி புவனேந்திரராஜா அவர்களும் வந்து சிறப்பித்தார்.

இரவு உணவு இடைவேளைக்குப் பின் அமெரிக்கன் முறையிலான தரகு விற்பனை (American Auction) என்ற புதுமையான நிகழ்வை திரு மகேஸ்வரன் பிரபாகரன் நடத்தினார். அதில் வானொலிப்பெட்டி உள்ளடங்கலாக பெரும் விலைமதிப்புள்ள பொதி ஒன்றை இளைஞர் குழு சுவீகரித்தது.

நிறைவாக ஆனால் முத்தாய்ப்பாக, ஈழத்தின் பொப்பிசைப் பிதா "சின்ன மாமியே" புகழ் நித்தி கனகரத்தினம் தன் இனிய மலரும் நினைவுகளொடு தனக்கே உரிய கிண்டலுமாகக் கலந்து கட்டி வழங்கிய பொப்பிசை விருந்து பார்வையாளர்களை ஆட வைத்து அலங்கரித்தது. இன்னும் வேண்டும் வேண்டும் என்று அரங்கமே யாசிக்க, நேரக்கட்டுப்பாடு கருதி சரியாகப் பத்து மணிக்கு இந்த ஒன்று கூடல் நிறைவேறியது.

அரங்கம் நிறைந்த கூட்டம், மனம் நிறைய வெளியேறியது.
அப்ப நீர் என்ன செஞ்சனீர் எண்டு கேட்காதேங்கோ, நான் படங்கள் சுட்டுக் கொண்டிருந்தனான் ;-)


முழு ஆல்பத்தையும் பார்வையிட இங்கே கிளிக்குங்கோ

Saturday, 30 January 2010

சிலைகளின் கதை

நியு சவுத் வேல்ஸ் கலைக்கூடத்திற்கு (Art Gallery of NSW) முன்னால் இரண்டு நீலப் பெட்டிகள். இதற்கு முன் போனபோது அங்கு அவை இருக்கவில்லை. என்ன இருக்கிறதெனப் பார்க்க ஒவ்வொர் பெட்டிக்குள்ளும் போனேன்..


முதலாம் பெட்டிக்குள் ஒரு குதிரை அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தது!! அதன் மேலிருப்பவர் கண்டு கொள்வதாயில்லை.. ஒருவேளை குதிரையின் செயலைக் கண்டு சிலையாகிப் போனதாலயோ தெரியவில்லை :O).

கட்டிலில் ஏறும் குதிரை. அதன் கிட்டே போய்ப் பார்த்தேன்... சொல்வழி கேட்கிற குதிரை மாதிரித் தெரியவில்லை.


அடுத்த பெட்டிக்குள் போனேன்.. ஒரு வரவேற்பறை அமைக்கப்பட்டிருந்தது. நடுவில் ஒரு வட்ட மேசை; அதன் மேல் ஒரு கம்பை உயர்த்திப்பிடித்த மனிதனின் மார்பளவுச் சிலை. பக்கத்திலேயே ஒரு அலமாரி. அலமாரிக்குள் என்னவென்கிறீர்கள்? குதிரையொன்றின் தலை!! கட்டிலைக் கலைத்துப் போட்டதற்குத் தண்டனையோ!? பாருங்களேன்:
என்ன இது!! எப்படிச் சாத்தியம்?

இதெல்லாம் ஜப்பானியக் கலைஞர் டாட்சு நிஷி (Tatzu Nishi) என்பவரது மனவண்ணம். ஏலவே உள்ள சிலைகளைச் சுற்றிய சூழலை மாற்றி அவற்றை புதுக் கோணத்தில் காட்டுவது இவர் திறன். கலைக்கூடத்தின் முன் உள்ள இரண்டு சிலைகளையும் 'மாற்றி அமைத்தது'ம் இவரது ஒரு ப்ரொஜெக்ட். சிலைகள் அப்படியே இருக்க, அவற்றைச் சுற்றி ஒரு வரவேற்பறையும், குதிரைத் தலையைச் சுற்றி ஒரு அலமாரியையும் மட்டுமல்லாமல், இன்னோரு குதிரை ஏற வாகாக ஒரு கட்டிலையும் கூட அமைத்திருக்கிறார்கள். கல்டோர் கலைத்திட்டத்திற்காக டாட்சு நிஷி செய்திருக்கிறார்.

பரிச்சயமான ஆனால் தலைக்கு மேலே உயர்ந்து போவதில் மிக அருகில் பார்க்கமுடியாத சிலைகள் இவை இரண்டும். சிலைகளின் வழ்மையான தோற்றம் கீழே. சிலைகளைப் பற்றி
இங்கே காணலாம்.









(சிலைகளுக்கான பட உதவி: New South Wales Art Gallery)















சிட்னியில் இருந்தால் அல்லது சிட்னிக்கு வந்தால் ஒரு முறை கிட்டப் போய்க் குதிரைகளைப் பாருங்களேன்..

Tuesday, 26 January 2010

ஜனவரி 26, 2010 அவுஸ்திரேலிய தினக் கொண்டாட்டங்கள்

இன்று ஜனவரி 26, அவுஸ்திரேலியர்களுக்கு பொதுவான ஒரு தினமாக அவுஸ்திரேலிய தினம் கொண்டாடப்படுகின்றது. இன்றைய நாள் இந்த நாட்டில் பிரித்தானியக் குடியேற்றவாசிகள் இங்கு குடியோறிய நாளை நினைவு கூர்ந்து வருடா வருடம் கொண்டாடப்படுகின்றது. பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு அதிகாலை முதல் பொழுது சாயும் வரை பிரார்த்தனைகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இந்த நிகழ்வு கொண்டாடப்படுவது வழக்கக். இன்று காலை சிட்னியின் டார்லிங் ஹாபர் துறைமுகத்தை ஒட்டிய சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைக் காணச் சென்றிருந்தேன். 99% மான வெள்ளையர்கள் நிறைக்க ஆங்காங்கே சீன, இந்திய முகங்கள் ஒன்றிரண்டு தென்பட்டன. மற்றவர்கள் பலருக்கு வேட்டைக்காரன், 3 Idiots, சன் டிவியின் தொடர் நாடகங்களை பார்ப்பதற்கான இன்னொரு விடுமுறை நாள் என்பது குறிப்பிடத்தக்கது. வந்த நாட்டின் நிகழ்வுகளில் ஒட்டாமல் வாழும் எம்மவர் நிலை என்று மாறுமோ.

Friday, 1 January 2010

NAN TIEN TEMPLE

சிட்னியில் இருந்து சுமார் 100 மைல் தொலைவில் (ஒரு மணி நேர பயணம்)அமைந்திருக்கிறது NAN TIEN பெளத்த கோயில்.பெரும் நிலப்பரப்பில் சிறப்பான பராமரிப்போடு சகல சமயத்தவருக்குமாக ஒவ்வொரு நாளும் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை திறந்திருக்கிறது இக்கோயில்.வாருங்கள் அக் கோயிலுக்குப் பயணிப்போம்.
சிட்னி நகரில் இருந்து கோயிலுக்குப் போகும் பாதை இது.

ஆலயத்துக்கு அருகாக நெருங்கும் போதே பெளத்த கோயிலுக்குக் கோபுரம் போலத் தெரியும் பகோடா(pagoda) கண்ணுக்குத் தெரியத் தொடங்கும்.கிட்ட நெருங்க நெருங்க ஆர்வம் பெருக ஆரம்பிக்கும்.அவ் ஆலயத்துக்குரிய ஆலய முகப்பு இது.

சற்று உள்ளே செல்ல முகப்பில் கருணையும் சாந்தமும் பொலிய அன்போடும் புன் முறுவலோடும் அமர்ந்திருக்கும் புத்தரை தரிசிக்கலாம்.

இது தான் தூரத்திலேயே தெரியத் தொடங்கும் பகோடா.

இது அதன் கிட்டிய தோற்றம்.8 மாடிகளைக் கொண்ட பகோடாவை அடைந்ததும் புத்தரை வழிபட்டு அதன் வலக்கைப் பக்கமாகச் சிறப்பாகப் பராமரிக்கப் படும்; மட்டமாகவும் சீராகவும் வெட்டி விடப்பட்ட மதில் போல வளர்ந்திருக்கும் புல் மதில் சூழ்ந்த படிக்கட்டினால் நடந்து சென்றால் பகோடாவின் பின் புறத்தை அடையலாம். மேல் மாடிகளுக்குச் செல்ல அனுமதி இல்லை.ஆனால் ஒரு சுற்று சுற்றி வரலாம்.பளீச்சென்ற சுத்தமும் அமைதியையும் நீங்கள் எங்கும் காணலாம்.

அவற்றுக்கு அப்பால் உயரமான மேட்டு நிலத்தில் அமைந்திருக்கிறது ஆலய மணி.மேலே உள்ள படம் அதன் தோற்றத்தைக் காட்டுகிறது.மிகப் பெரும் அளவில் அமைந்திருக்கும் இம்மணியை பெரும் மூங்கில் குளாய் போன்ற ஒரு அமைப்பினை உடைய களியினால் அசைத்து மணியில் முட்டச் செய்வதன் மூலம் ஓசை எழுப்பப் படுகிறது.

ஒரு முறை நீங்கள் அதனை மணியில் தட்டச் செய்வதன் மூலம் அதன் உள்ளே கேட்கும் இனிய ரீங்காரத்தை கிட்டத் தட்ட 2, 3 நிமிடங்களுக்கு கேட்கக் கூடியதாக இருக்கிறது. அதன் இனிய ஓசை இந்து, பெளத்த தேவாலயங்களின் மணியோசையிலிருந்து வேறுபட்டதாகவும் இனிய துல்லிய ஓசையை கொண்டதாகவும் இருக்கிறது.

அது வெட்ட வெளி ஒன்றில் அமைந்திருப்பதால் அம்மணியின் ஓசை அவ்வாலயப் பரப்பெங்கும் துல்லியமாகக் கேட்கக் கூடியதாக இருக்கிறது.கீழே உள்ள படம் மணி உள்ள இடத்திலிருந்து ஆலயத்தின் பின் புறத்தைக் காட்டுகிறது.

இது ஆலயத்தின் இன்னொரு கட்டிடம்.

இது அதன் இன்னொரு தோற்றம். மிக அழகும் சுத்தமும் சாந்தமும் சிறப்பான பராமரிப்பும் கொண்ட ஒரு இடம் இது.

இது அதன் அருகாக இருக்கும் அடுத்த கட்டிடம். எல்லா இடத்திலும் புத்தரே பல்வேறு தோற்றங்களில் அமர்ந்திருக்கிறார்.உள்ளே செல்ல அனுமதி எல்லோருக்கும் இருக்கிறது.உள்ளே கட்டிடம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. நடுவில் புத்த பகவானும் இடது கைப்புறம் உள்ள பகுதி தியான மண்டபமாகவும் வலது கைப்பக்கம் உள்ள பகுதி வேண்டுதலை நிறைவேற்றும் இடமாகவும் இருக்கிறது.

இங்கிருக்கிற புத்தர் உருவச் சிலைகள் இலங்கையின் கருணையும் அன்பும் சாந்தமும் கொண்ட புத்த சிலைகளை நினைவூட்டுகின்றன.இப்பெரும் சிலைகளின் பின் புறம் பல ஆயிரக் கணக்கான சிறு சிறு புத்தர் சிலைகள் உள்ளன.எல்லா இடத்திலும் பிரார்த்தனைக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்துக்களின் கோயிலில் நந்தி சிலை இருப்பது போல் சந்தோசம் நிரம்பிய மரத்தில் கடந்தெடுக்கப்பட்ட படுத்திருக்கும் இப்புத்தர் சிலை மிகக் கலை நயத்தோடு முன்னால் இருக்கிறது.

இது அங்கிருந்த அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்த மரத்தில் கலை நுட்பத்தோடு உருவாக்கப் பட்டிருக்கும் இன்னொரு கலைப் படைப்பு.

இது இவ்வாலயத்தின் பின் புறத் தோற்றம்.

இது ஆலயக் கட்டிடம் ஒன்றின் மூலைப் பக்கம். இங்கு இந்த இடத்தில் சிறப்பாக உடனுக்குடன் தயாரித்து வழங்கப்படும் தேநீர் சாலையும் உணவு விடுதியும் இருக்கிறது. எப்போதும் மக்களால் நிரம்பி இருக்கிறது இவ்விடம்.இடப் பற்றாக் குறையும் நீண்ட வரிசையும் எப்போதும் இங்கு இருக்கிறது. ஆனாலும் பணிவோடும் புன் முறுவலோடும் பொறுமையோடும் வேலை செய்யும் பெளத்த இளம் பெண்கள் மிக அழகாக வருபவர்களை உபசரிக்கிறார்கள்.சீன மக்களின் உபசரிப்புப் பண்பையும் பணிவையும் இங்கு காணலாம்.

உள்ளும் வெளியிலுமாக ஆசனங்கள் போடப் பட்டிருக்கின்றன. உட் புறம் இயற்கையான வகையில் மரங்களால் பொழியப்பட்ட சாதனங்களால் எளிமையாக அலங்கரிக்கப் பட்டிருக்கிறது.சீனக் கட்டிடக் கலையின் வனப்பையும் இங்கு காணலாம்.அவர்களின் கட்டிடக் கலையின் சிறப்பம்சம் கூரையின் மூலைப் பக்கம் சற்று உயர்வான தன்மையைக் கொண்டிருப்பதாகும். இங்கும் அதன் அழகைக் காணலாம்.


தாமரைக் குளமும் மூங்கில் காடும் நிழல் தரு மரங்களும் கருங்கல் இருக்கைகளும் சீமேந்தால் செய்யப்பட்ட மிகத் திருத்தமான முக அமைப்பைக் கொண்ட சிலைகளும் உள்ள இவ்விடத்தில் விரிவுரை மட்டபம், தியான மண்டபம், நூலகம்,அருங்காட்சியகம்,தங்கும் விடுதி,கேட்போர் கூடம்,உணவுக்கூடம், விற்பனை நிலையம், வரவேற்புக் கூடம் என்று சகல வசதிகளும் ரம்மியமும் நிரம்பிய இடமாக இக்கோயில் அமைந்திருக்கிறது.

சென்ற வருட முற்பகுதியில் நான் சென்றிருந்த போது அங்கிருந்த கல்வி நிலையத்தில் ஒரு சீன பெளத்தரின் புகைப்படக் கண்காட்சி நடை பெற்றுக் கொண்டிருந்தது."மனிதம்" என்ற தலைப்பில் அவரது வாழ் நாள் சேகரிப்புகள் மிகக் கலைத்துவத்தோடு பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.சகல இன மக்களிடமும் மிக அபூர்வமாக வெளிப்படும் மனிதத் தன்மையை அந்த மனிதர் தன் கமராவுக்குள் சிக்க வைத்திருந்தார். குறிப்பாக ஈழத்து ஏழைத் தமிழ் தந்தை ஒருவர் ஒரு காலை இழந்த தோற்றத்தோடு நிற்க அந்த முடமான காலை உரிமையோடும் பாசத்தோடும் ஒரு விதமான பெருமையோடும் பற்றியபடி நின்ற ஒரு சிறுவனின் உணர்வுகளை அம்மனிதர் கமராவுக்குள் சிறைப்படுத்தி இருந்த விதம் மறக்க முடியாததாக இப்போதும் இருக்கிறது.

என் தோழி ஒருவர் போன போது ஒரு இசை நிகழ்ச்சி நடை பெற்றதாகக் கூறினார்.இயற்கை, ரம்மியம், அமைதி, கலைத்துவம் இவற்றைக் காண, ரசிக்க விரும்புபவர்கள் அவர்களின் இணையப் பக்கத்தை ஒரு முறை பார்த்து விட்டுப் போனால் மேலும் பயன் பெறலாம்.

தெய்வீக வாசனையும் அமைதியும் தவளும் இவ்விடம் ரம்யமான சூழலால் மேலும் மெருகு பெறுகிறது. சுத்தமும் சிறப்பான பராமரிப்பும் மலைப்பாங்கான சூழைலில் அதன் அமைவிடமும் மேலும் அந்த இடத்துக்கு தெய்வீக அம்சத்தைத் தருகின்றன.

சிட்னியின் அவசர வாழ்க்கையில் சிக்கிக் கொண்டவர்கள் சலசலப்பையும் சத்தத்தையும் சற்றே தவிர்க்க விரும்புபவர்கள் அமைதியாக எங்கேனும் ஒரு நாளில் சென்று வர இக் கோயில் நல்ல இடம்.

ஆலய முகவரி;
Bekeley Road,
Berkeley,
N.S.W.2506. தொலைபேசி இலக்கம்;42720600

email; info@nantien.org.au
web; www.nantien.com

Friday, 4 December 2009

சிட்னியின் சிறீமாவே வருக, நல்லாட்சி தருக!

அவுஸ்திரேலிய மாநிலங்களை Premier என்று சொல்லப்படும் முதலமைச்சர்களால் ஆளப்படுவது வழக்கம். தற்போது மத்திய ஆட்சிக்கட்டிலில் இருக்கும் தொழிற் கட்சி (Labour) மேற்கு அவுஸ்திரேலியா தவிர்ந்த மற்றைய ஐந்து அவுஸ்திரேலிய மாநிலங்களின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியும் இந்த தொழிற் கட்சியே என்பது கூடுதல் தகவல். அதில் குறிப்பாக அவுஸ்திரேலியாவில் சனத்தொகை பரம்பல் அதிகம் உள்ள மாநிலமான நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஆட்சியை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகக் கோரப்பிடியில் வைத்திருக்கிறது இந்த தொழிற்கட்சி. அப்ப சிட்னி எங்கேய்யா என்று கூ காட்டுபவர்களுக்காக, சிட்னி தான் நியூசவுத்வேல்ஸ் மாநிலத் தலைநகராக இருக்கின்றது.

1995 ஆம் ஆண்டில் பொப் கார் (Bob CARR) என்பவர் தொடக்கி வச்சாலும் வச்சார். 14 வருஷங்களாகத் தொடர்ந்து கேட்க நாதியில்லாத தனிக்காட்டு ராஜாவாக தொழிற்கட்சியே இருந்து வருகின்றது. ஆசிய நாட்டவர்களின் பரம்பல் அதிகமாக இருக்கும் இடங்களில் எல்லாம் தொழிற் கட்சி தான் எம்.ஜி.ஆர் ரேஞ்சில் இருக்கும். ஏனென்றால் முக்கிய எதிர்க்கட்சியான லிபரலுக்கு வெள்ளைத் தோல் மோகம் இருப்பதாக ஏனோ ஒரு உணர்வை அவர்களும் காட்டிக் கொள்வார்கள், பொது ஜனமும் அப்படியே எடுத்துக் கொள்வார்கள். பொப் கார் பன்னிரண்டு வருஷங்கள் தொடர்ந்து நியூசவுத் வேல்ஸ் மாநில முதல்வராக இருந்து, அலுத்துப் போய் இனி வேண்டாம் இந்தப் பதவி என்று தானாகவே இராஜிமா செய்ய (இவ்வளவுக்கும் அவருக்கு வயசு 84 கூட இருக்காது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்)முன்வந்தார். அதற்கு அவர் சொன்ன ஜீஜீபி காரணம் என்ன தெரியுமா, முதல்வராக இருந்தால் குடும்பத்தோடு நேரத்தைச் செலவழிக்க வழியில்லை, இதெல்லாம் ஒரு காரணமா அவனவன் கொடநாடுக்கு ரெஸ்ட் எடுத்துக் கொண்டு ஒரு பக்கமும், இன்னொருபக்கம் சினிமா விருது நிகழ்ச்சிகளை பெப்சி, கோக் என்று நாளாந்தம் ஒவ்வொரு அமைப்புக்களுக்காகவும் நடத்திக் கொண்டு எல்லாம் அரசியல் செய்யலாமே என்று நீங்கள் கேட்பது புரியுதய்யா.

பொப் கார் விட்ட முதல்வர் பதவியை அடித்துப் பிடித்துக் யம்மா யாம்மா என்று கையில் ஏந்தினார் மொரிஸ் எம்மா Morris IEMMA. அவர் முதல் நாள் முதல்வராக வந்த சம்பிரதாய பேச்சிலேயே எனக்கு குடும்பம் முக்கியம், வார இறுதி நாட்களில் எல்லாம் வேலை செய்யமாட்டேன் என்று அதிரடியாக அறிவித்து மூன்று வருஷம் ஆட்சியில் இருந்தார். இடையில் ஒரு தேர்தலைச் சந்தித்தும் அதிலும் வெற்றியீட்டி நானெல்லாம் ஓ.பன்னீர்ச் செல்வம் இல்லைப்பா என்று நிரூபித்தார். ஆனாலும் சனி மாற்றம் இவரை விட்டால் தானே. மின்சார இலாகாவை தனியார் மயப்படுத்த வேண்டும் என்ற இவரது தீர்மானத்துக்கு கட்சிக்குள்ளேயே ஏகப்பட்ட குத்துப்பாடு. தொடர்ந்த இவரது அமைச்சரை மாற்றங்களையும் அதிருப்தியோடு கவனித்தது கட்சி. கடைசியில் நமக்கு நாமே ஆப்பு என்று இராஜினாமா செய்து விட்டார் கூடவே இவரது அமைச்சர்கள் சிலரும் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள்.

எம்மா இராஜினாமா செய்ய பழம் நழுவி நேதன் ரீஸ் (Nathan Rees) கையில் விழுந்தது. ரீஸ் ஐ பார்த்தால் ஜேம்ஸ் பொண்ட் படங்களின் கதாநாயகன் கணாக்காய் இருப்பார். அவரின் வழைவு நெழிவான ஆங்கில உச்சரிப்பை அவரே மீண்டும் கேட்டால் கஷ்டமா இருக்கும். 15 மாதங்கள் தான் இவருக்குக் கொடுப்பினை. நியூசவுத்வேல்ஸ் மாநில வரலாற்றிலேயே தேர்தலைச் சந்திக்காக மன்மோகன் சிங் இவர் தான். ஆமாம் [பிரதமர் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே வந்தவருக்கும் அல்ப ஆயுசு தான். கட்சிக்குள் இவருக்கு ஏகப்பட்ட எதிரிகள். ஒரு உறைக்குள்ளேயே ஏகப்பட்ட வாள்களை வச்சு என்ன செய்ய. கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி கட்சி கூடியது. திட்ட அமைச்சராக இருந்த Kristina Keneally 47 வாக்குகளால் ரீஸ் ஐ வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

இன்று முதல் எங்கட ஊருக்கு புது சிறீமா பண்டாரநாயக்கா, என்ன விளங்கவில்லையா. நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் முதல் பெண் பிரதமராக வந்திருக்கிறார் இந்த கிறிஸ்ரினா கெனெல்லி. அமெரிக்க அப்பா, அவுஸ்திரேலிய அம்மா என்ற நதிமூலம் கொண்ட இவர் அமெரிக்காவிலேயே அதிக காலம் வாழ்ந்து கழித்தவர்.

இன்று இவரது அறிமுகக் கூட்டங்களில் எல்லாம் ஏகத்தும் பவ்ய(பம்மி)மாகப் பேசி மக்கள் மனதை ஒரே நாளில் கொள்ளை அடிக்க முனைந்தார் என்பதை தொலைக்காட்சியைப் பார்த்ததும் தெரிந்து கொண்டது. இதுவரை காலமும் அரசியல்வாதியை கொஞ்சம் மிடுக்காகப் பார்த்துப் பழகிய கண்களுக்கு Human Resources Director மாதிரி பதுமையாக இவர் பேசும் ஆளுமை எவ்வளவு தூரம் எதிர்க்கட்சியோடு நிண்டு பிடிக்கப் போகிறது என்பது ஜிம் இல் இருந்து ரிவி பார்க்கிறவையில் இருந்து டோல் (அரச உதவிப்பணம்) இல் இருந்து பார்க்கிறவை வரை கேட்கும் கேள்வி. 2003 ஆம் ஆண்டில் தான் இவர் அரசியலிலேயே ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக வந்தார். நாற்பது வயதில் பிரதமர் யோகம் அடிக்கும் என்று இவர் சத்தியமாக நினைத்திருக்க மாட்டார்.

கிறிஸ்ரினாவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தொலைக்காட்சிகள் பொதுஜனங்களின் வாய்க்குள் மைக்கை நுழைத்துக் கேட்டால் "காலை வேளைகளில் ரயிலில் ஒரே கூட்டமா இருக்கு, பெருந்தெருக்களிலும் ஒரே நெரிசல்" என்று தான் சொல்லி வைத்தால் போலச் சொல்லுகிறார்கள். (இலங்கையில் இருக்கிறவை தயவு செய்து இதையெல்லாம் கேட்டு ரத்த அழுத்தம் எகிறாமப் பார்த்துக் கொள்ளுங்கோ, எங்களுக்கு சாப்பாடுக்கே வழியில்லை கார் போற வழியைக் கேட்கினமாம்)



கிறிஸ்ரினாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது எதிர்க்கட்சி. அடுத்த வருஷம் மாநிலப் பொதுத் தேர்தல் வரவிருக்கிறது. இவ்வளவு நாளும் தனிக்காட்டு ராசாவாக இருந்த தொழிற்கட்சியை லிபரல் விரட்டுமா அல்லது அதுக்கு முன்னரேயே கிறிஸ்ரினா போய் விடுவாரா என்று காலம் தான் பதில் சொல்லும்.

ஆரம்பம் எல்லாம் நல்லாத் தான் இருக்கு ஆனா....

Sunday, 29 November 2009

சிட்னி வந்தால் "Jenolan Caves" போங்கோ

சிட்னிக்கு அலுவலக விஷயமாக வருபவர்களோ அல்லது சுற்றுலாவுக்காக வருபவர்களோ என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுதான். "சிட்னியில் சுற்றிப் பார்க்க உருப்படியான இடம் எது?, வெறும் பீச் இற்கு மட்டும் தான் போகவேண்டியிருக்கே" என்று சலிப்பார்கள். அவர்களுக்கு நான் முதலில் கைகாட்டி விடும் இடம் இந்த "Jenolan Caves".

பொதுவாகவே ஆதிவாசிகள் என்றால் இயற்கையின் சீற்றத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள குகைகளை நாடுவார்கள். அப்படியாக முன்னொரு காலத்தில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான Aborigines வாழ்விடமாக Jenolan Caves என்ற குகைகளே இருந்து வந்திருக்கின்றன. ஐரோப்பியர்களின் கண்ணில் பட்ட கங்காரு தேசம் நாளடைவில் அவர்களின் கழுகுக் கண்களில் இருந்து இந்தக் குகைகளும் தப்பி விடவில்லை. James Whalan என்ற உள்ளூர் குடியானவரின் பார்வையில் தான் இந்தக் குகைகள் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வருஷம் 1838 ஆம் ஆண்டு என்று கொள்ளப்படுகின்றது.


James Whalan மற்றும் Charles இன் முயற்சியால் இந்தப் பகுதியில் இருந்த பல குகைகள் கண்டுபிடிக்கப்பட்டு நாளடைவில் அவை முக்கியமான சுற்றுலாத் தலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இன்று நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் செல்லும் இடமாக இந்த "Jenolan Caves" மாறி விட்டது.

இந்த "Jenolan Caves" பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்து ஒவ்வொரு குகைகளாகப் பார்ப்போரும் உண்டு. ஆனால் ஏதாவது ஒரு நல்ல குகையைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தாலே போதுமானது. ஒவ்வொரு குகைகளைப் பார்ப்பதற்கும் தனித்தனிக் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இவை பெரியவர்களுக்கு 27 அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து ஒவ்வொரு குகையின் தன்மையைப் பொறுத்து வேறுபடுகின்றது. முழுமையான விபரங்களைப் பெற்றுக் கொள்ள இங்கே செல்லுங்கள்.

ஒவ்வொரு குகைகளைப் பார்ப்பதற்கும் ஒவ்வொரு நேரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. பேய்கள் உலாவும் குகை கூட இருக்கிறதாம். கிடுகிடுகிடுகிடு
எந்தக் குகைக்குப் பயணிக்க வேண்டும் என்று நுளைவுச் சீட்டை வாங்கியிருக்கிறீர்களோ அந்தக் குகை முகப்பிற்குச் செல்ல வேண்டும். பின்னர் அந்தக் குகையைச் சுற்றிக்காட்ட நியமிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி ஒருவர் வந்தது, குறித்த குகையின் பெருமையைச் சிலாகித்துப் பேசி விட்டு எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாக விளக்கம் சொல்லிக் காட்டுவார். கிட்டத்தட்ட 45 நிமிட நேரம் இந்தக் குகைப் பயணம் இருக்கும். கரடு முரடான பாதையாக மேலும் கீழும் ஏறி இறங்கும் பயணமாக இருந்தாலும் களைப்பே தெரியாத அளவுக்கு உள்ளே லேசான குளிரோடு இயற்கை செதுக்கி வைத்த நவீன காலச் சிற்பங்களாய் பவளப்பாறைகள் ஒவ்வொன்றும் தென்படும் காட்சிகளைக் காணும் போது உள்ளத்தில் உவகை வந்து சேரும். சில பகுதிகளில் வண்ண வண்ண விளக்குகளை இட்டு அலங்கரித்திருக்கின்றார்கள். இந்தக் குகைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்று மல்லுக்கட்டுபவர்களுக்கும் வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன.

சுற்றுலா முடித்து வெளியில் வந்தால் பசி எடுக்கிறதா, அங்கேயே நல்ல உணவகமும் உண்டு. கூடவே "Jenolan Caves" இற்கு வந்து போனதன் ஞாபகமாக வாங்கி வைக்க ஞாபகச் சின்னங்களை விற்கும் கடையும் உண்டு.

Blue Mountains என்ற இன்னொரு முக்கிய சுற்றுலா மையத்துக்கு அருகைமையிலேயே இந்த இடம் இருப்பது இன்னொரு வசதியான அம்சமாகும். நாளாந்தம் சுற்றுலாப் பயணிகளை இந்த இடங்களுக்கு ஏற்றிச் செல்லும் Sydney Explorer பஸ் வசதியும் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த இடத்திற்கு நேரடியான புகையிரதச் சேவை கிடையாது. சொந்த வாகனத்தில் வருபவர்களும் தாராளமாகப் பயணிக்கலாம். குறுகலான பாதையாக மலையைச் சுற்றுச் சுற்றி மேல் முகட்டுக்கு வருவதற்குள் ஒவ்வாமையால் வாந்தி/சத்தி வருபவர்களும் உண்டு. இன்னொரு விஷயம், இந்த இடத்துக்கு சொந்த வாகனத்தில் பயணிக்கும் போது வாகனத்தில் தாராளமாக எரிபொருள் உள்ளதா எனச் சரி பார்த்த பின்னரே பயணப்படுங்கள். காரணம், இந்த இடத்துக்குப் பயணிக்கும் கிட்டத்தட்ட 45 நிமிட சுற்று வட்டாரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் காணக்கிடைப்பதே அபூர்வம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று மலையின் இடையில் இருந்த ஒரு எரிபொருள் நிரப்பு நிலையமும் போன தடவை போனபோது இழுத்து மூடப்பட்டிருந்தது.
ஒகே, சிட்னி வந்தால் "Jenolan Caves" போங்கோ, போயிட்டு வந்து அனுபவத்தைச் சொல்லுங்கோ

Sunday, 4 October 2009

"Vegemite" சொல்லித் தந்த வியாபாரப் பாடம்

எந்த ஒரு கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஒரு சுவாரஸ்யமான செய்தி இருக்கும். "ஒருவாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்" என்று ஒரு பிரபலமான பாடலே சொல்லி வைத்திருக்கின்றது. இது எதற்கெல்லாம் பொருந்தவில்லையோ ஆனால் Vegemite என்ற உணவுப்பதார்த்தம் வந்த கதைக்குத் தாராளமாகப் பொருந்தும் வண்ணம் அதன் வரலாறு அமைகின்றது.

Marmite என்பது உலகறிந்த உணவுசேர்க்கைப் பதார்த்தமாக விளங்கிய காலத்தில் இதனை அவுஸ்திரேலிய நுகர்வோரும் பயன்படுத்தும் விதமாக இதன் மூல உற்பத்தி நடைபெறும் நியூசிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்து விநியோகித்து வந்தார்கள். ஆனால் முதலாம் உலகப்போர் ஆரம்பிக்கவும், கப்பல் மூலமான இறக்குமதி விநியோகம் தடைப்பட்டது. அதுவரை மார்மைட் (Marmite) சுவையில் ருசிகண்ட பூனைகளாக இருந்த நுகர்வோருக்கோ படுதிண்டாட்டமாக அமைந்து விட்டது இந்தப் பொருள் மீதான இறக்குமதி நெருக்கடி.

எப்போதுமே அந்த நேரத்தில் அமையும் சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாக அமைப்பவன் வெற்றியடைகின்றான் என்பதை Fred Walker & Company இற்கும் தாராளமாகக் கொடுத்துக் கொள்ளலாம் போல. இல்லையென்றால் இந்த மார்மைட் விவகாரத்தை ஒரு நேர்மறையான எண்ணத்தோடு சிந்தித்துச் செயற்ப்பட்ட அந்த நிறுவனத்தை என்னவென்று சொல்வது. Fred Walker என்பவர் தனது Fred Walker & Company மூலம் ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தினை அவுஸ்திரேலியாவில் இருந்து ஆசிய தென் ஆபிரிக்க நாடுகளுக்கும் ஏற்படுத்திச் செயற்பட்டு வந்தவர். இந்த நிறுவனம் உணவுப் பொருட்களை மையப்படுத்தி குறிப்பாக பட்டர், சீஸ், தகரத்தில் அடைக்கப்பட்ட மாமிச உணவுப் பொருட்களோடு சம்பந்தப்பட்டதான வணிகமாக அது விளங்கியது. அக்காலகட்டத்தில் Fred Walker அவுஸ்திரேலிய இராணுவத்திலும் இணைந்து செயற்பட்டு கப்டன் பதவியில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் மெல்பன் நகரில் இருந்து செயற்பட்டு பின்னர் சிட்னி, அடலெயிட் ஆகிய அவுஸ்திரேலியாவின் பிற நகர்களிலும் கூடவே பக்கத்து நாடான நியூசிலாந்திலும் அமைத்துக் கொண்டது Fred Walker & Company . இந்த நிறுவனம் அகலக் கால் வைக்கவும், முதலாம் உலகப் போரின் கொடூர விளைவுகளில் ஒன்றாக கப்பல் மூலமான இறக்குமதி, ஏற்றுமதி வாணிபமும் தடைப்பட்டது.


முன் சொன்ன மார்மைட் போன்ற பொருட்கள் இனி அவுஸ்திரேலியாவுக்கு வலது/இடது காலை வைக்கவே முடியாது போல என்றெண்ணிய Fred Walker வுக்கு அப்போது தோன்றிய யோசனை தான் அந்த நிறுவனத்தைக் காலாகாலமும் நினைக்க வைக்கும் அளவுக்கு அமைந்து விட்டது. உணவுத்துறையில் அன்றைய காலகட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆராய்ச்சியாளரனா டாக்டர் சிரில் பி. கலிஸ்ரர் ( Cyril P. Callister ) என்ற விஞ்ஞானிக்கு Fred Walker & Company மூலம் ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்படுகின்றது. அதுதான் இந்த மார்மைட் இற்குப் பதிலீடாக இன்னொரு பொருளை கண்டுபிடிக்க வேண்டும் என்பது. சில மாதங்கள் நீடித்த டாக்டர் சிரிலின் ஆராய்ச்சியின் விளைவாகப் பிறந்தது ஒரு பதார்த்தம். 1922 ஆம் ஆண்டில் வந்துதித்த அந்தக் கண்டிபிடிப்பை அது 'முழுமையான, பரிசுத்தமான சைவப்பதார்த்தங்களின் கலவை" என்று மட்டும் தான் டாக்டர் சிரிலால் சொல்ல முடிந்தது. வைட்டமின் B சார்ந்த Yeast extract என்ற பதார்த்தத்தின் வெளிப்பாடாகவே இந்த உணவுக் கலவை அமைந்தது.

ஒரு பதிலீட்டுப் பொருளையையோ, போட்டிப் பொருளையோ கண்டு பிடிப்பதை விடச் சிக்கல் மிகுந்தது அந்தப் பொருள் நுகர்வோர் வசம் ஈர்க்கப்படுவதற்கு அமைய வேண்டிய நச் என்ற பெயர். அந்த விஷயத்திலும் Fred Walker & Company ஒரு புதுமை செய்தது. அவுஸ்திரேலியர்களிடம் "இப்படி ஒரு உணவுப் பதார்த்தம் கொண்டு வந்திருக்கிறோம், இந்தப் பொருளுக்குத் தகுந்த பெயர் சூட்டும் பரிந்துரைகளில் இறுதிச் சுற்றுக்கு வருபவர்களுக்கு 50 பவுண்டுகள் பணத்தொகை பிரித்துக் கொடுக்கப்படும்" என்று பகிரங்கப்படுத்தியது. பெயர் சூட்டும் பரிந்துரைகளில் தகுந்த பெயரை நிறுவனர் Walker இன் மகளையே தேர்ந்தெடுக்கச் சொன்னார். அப்போது தான் யாரோ ஒரு புண்ணியவன் சூட்டிய Vegemite என்ற பெயர் கவர்ந்திழுத்தது, அதையே வைத்து விட்டார்கள். பெயர் சூட்டியவர் பெயரை மட்டும் தொலைத்து விட்டார்களாம் என்பது ஒரு Vegemite போத்தலுக்குள் அடக்க வேண்டிய கொடுமை.

Vegemite என்ற பெயர் வைத்த முகூர்த்தம் அந்தப் பொருளின் விற்பனையிலும் உடனே சூடு பிடித்தது என்று சொல்ல முடியாது. அதுவரை மார்மைட் ஐ சாப்பிட்ட நாக்குகள் வெஜிமைட்டை அவ்வளவாக ஏற்காது புறந்தள்ளினர். ஒரு படம் ஓடவில்லையென்றால் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளரை மாத்திப் பார்க்கலாம் போன்ற காலாகாலத்து தமிழ் சினிமா ஜோதிடம் Walker இற்கும் அப்போது தோன்றியிருக்கவேண்டும் போல. வெஜிமைட் என்ற பெயரைத் தூக்கி விட்டு "Parvill" என்று வைத்துக் கொண்டார். ஆனால் பெயர் மாத்தி என்ன பலன் விற்பனை படு மந்தம் தான் என்ற நிலை.

இந்த நிலையில் Walker Kraft Walker Cheese Co என்ற நிறுவனக் கூட்டாக 1925 இல் ஆரம்பித்ததோடு Parvill" இல் "Vegemite" என்று பழைய பெயரை மாத்திக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்கள்.

1935 ஆம் ஆண்டு வரை மந்தமாகத் தொடர்ந்த விற்பனையில் Walker இறந்து போன அதே ஆண்டில் தான்ஒரு பொருளின் அறிமுகத்துக்கு பரவலான விற்பனை மேம்படுத்தல் வேலைகளும் அவசியம் என்பது லேட்டாகத் தான் உறைத்தது அவர்களுக்கு. பெருமளவு விலையுயர்ந்த பரிசு மழைகளோடு மீண்டும் ஒரு கை பார்த்து விடுவோம் என்று களமிறங்கியவர்களுக்கு இம்முறை கிடைத்தது பெரும் வெற்றி. பெரும் எடுப்பிலான Walker இன் விற்பனை மேம்படுத்தல்கள் இந்த வெஜிமைட் ஐ நுகர்வோர் மத்தியில் ஈர்க்கச் செய்தது. சரி என்னதான் இதில் இருக்கிறது என்று ஆரம்பித்தவர்கள் உன்னை விட்டு விலகமாட்டேன் என்று சத்தியம் செய்யாத குறையாக வெஜிமைட் ஐப் பிடித்துக் கொண்டார்கள்.

தக்க சமயத்தில் பிரித்தானிய மருத்துவர் சங்கம் இதனை அங்கீகரிக்கவும், அவுஸ்திரேலிய மருத்துவர்களும் வைட்டமின் B க்கான பரிந்துரையாகச் சொல்ல ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுக்கு மட்டுமே என்று மட்டுப்படுத்தப்பட்ட இதன் வியாபாரம் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான கடுக்கடங்காது எல்லைகளைக் கடந்து சென்றது. இன்று சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 22 மில்லியன் வெஜிமைட் போத்தல்களை காலி செய்கின்றது நுகர்வோர் உலகம்.

"We're happy little Vegemites" Vegimite இன் விளம்பரம் 60 களில் இப்படி இருக்கும், இன்றைய வெள்ளைக்காரப் பெருசுகளுக்கு இந்த விளம்பரப் பாடல் கூட அலுக்காத சங்கீதம் தான்



இப்போது அவுஸ்திரேலிய நுகர்வோர் சந்தையில் Marmite ஆ அது யார்? என்று கேட்கும் நிலை வந்து விட்டது. கூடவே வெஜிமைட் உம் தன் தசாவதாரத்தைக் காட்ட பலவிதமான சுவைகளிலும் கலவைகளிலும் அறிமுகப்படுத்தி வெற்றி நடையைத் தொடர்கின்றது. அந்த வகையில் தற்போது வந்திருக்கும் புதிய பொருள் பெயர் அப்படியே பில்கேட்ஸ் ரகம், இல்லையா பின்னே "iSnack 2.0" என்பதே அந்தப் புதுசின் பெயர். தம் பழைய பாணியில் நுகர்வோருக்கே போட்டியை வைத்து 48 ஆயிரம் பரிந்துரைகளில் இணையத்தள வடிவமைப்பாளராகத் தொழில்புரியும் Dean Robbins என்ற மேற்கு அவுஸ்திரேலிய வாசி சூட்டிய பெயர் தான் அது. iSnack 2.0 இதென்ன விசித்திரமான பெயர் , பெயரை மாற்றுங்கள் என்று கூப்பாடு போடுவோரும் இல்லாமல் இல்லை. இந்தக் கூப்பாடுகளின் எதிரொலியாக தற்போது இந்தப் அறிமுகத்துக்கு Cheesybite என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

நிலவும் சூழ்நிலைக்கேற்ப நுகர்வோர் தேவையை கண்டுணர்தல் , தகுந்த மாற்றீடை உரிய வகையில் ஆய்வு செய்து அறிமுகப்படுத்துதல், கவர்ச்சிகரமான விற்பனை மேம்படுத்துதல், அந்தப் புதிய மாற்றீடு நுகர்வோர் சந்தையில் தன் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளுதல் இது தான் வெஜிமைட் போத்தலுக்குள் அடங்கியிருக்கும் வியாபாரப் பாடம்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் வால்கருக்கோ (Walker)போரும் பொருள் சேர்க்கும்.

உசாத்துணை மற்றும் படங்கள்
Kraft Australia
The Australian
Sydney Morning Herald
Wikipedia

Wednesday, 23 September 2009

Sydney dust storm worst in 70 years



A DUST storm that has blanketed Sydney in an eerie red haze is the worst in at least 70 years, if not the history of the state, the Bureau of Meterology says.

The dust cloud covers almost the whole of NSW, after an extreme low pressure system moved across the state from central Australia and western NSW.

The dust caused commuter chaos, the cancellation of flights from Sydney Airport, the closure of the M5 tunnel and the suspension of Sydney ferries.

People with respiratory illnesses were told to stay indoors and health authorities advised people to avoid exercise until the dust cleared.

The Bureau of Meteorology's Regional Director for New South Wales Barry Hanstrum said visibility at Sydney Airport had dropped as low as 400m.

“An event like this is extremely rare,” Mr Hanstrum said. “It's one of the worst, if not the worst.”

The Bureau of Meteorology issued a severe weather warning for damaging winds in Sydney with a gale warning issued for Sydney closed waters.

Wild winds are lashing the Hunter region and gale force winds of up to 100km/h are expected to hit Sydney.

Mr Hanstrum said hail stones reportedly as big as cricket balls hit the town of Crookwell near Goulburn last night.

In the state's west visibility was reduced to just 10 metres in Broken Hill.

A Sydney Airport spokesman said a combination of strong cross winds and low visibility would lead to flight delays throughout the day.

“We're operating in low visibility conditions due to strong winds and dust haze,” he said.

“Departure and arrivals delays will be experienced at both Sydney and domestic and international airports.

Sydney icons such as the Harbour Bridge and the Opera House took on a ghostly appearance.

Armed with his camera at Circular Quay, Manly resident Alec Wagstaff, who was forced to catch the bus to the city after the ferries cancelled, said he relished the chance to photograph the tourist attractions in a different light.

“I woke up and there was this unbelievable golden hue,” Mr Wagstaff said.

“It is really interesting light, it's going to be quite a challenge.”

“I haven't seen this since Adelaide 30 to 40 years ago.”

Police urged motorists drive with caution reporting heavy traffic and low visibility.

City-bound lanes of the M5 tunnel are still closed and the Roads and Traffic Authority is advising drivers to use King Georges Road.

The State Emergency Services have received almost 200 requests for assistance across the state.

The dusty conditions are expected to last throughout the morning.


Article from: The Australian

Friday, 19 June 2009

சிட்னி அவியல் ஜூன் 19 வரை....!

நீஈஈஈஈஇண்ட நாட்களாகப் பதிவு ஏதும் போடாமல் ஒரே காடு மண்டிக்கிடக்குது, எனவே மீண்டும் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் கணக்காக அவியலோடு வந்திருக்கிறேன்.

அவுஸ்திரேலியாவில் நாடு தழுவிய ரீதியில் இந்த வாரத்தோடு இரண்டாயிரத்தைத் தொடப்போகும் பன்றிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு புறமிருக்க, பணியிடங்களில் சற்றுத் தும்மினாலே பின்லாடனைப் பார்ப்பது போல் வெறிக்கும் அளவுக்கு இந்த நோய் குறித்த கிலி கிழவிக்கு அம்மன் வந்த கணக்காகப் போட்டு உலுப்புகின்றது. தும்மல், சளி, இருமல் நீடித்தால் அலுவலகப் பக்கம் வராதீர்கள், பள்ளிக்கும் பிள்ளைகளை அனுப்பாதீர்கள் என்று நோட்டீஸ் ஒட்டும் அளவுக்கு தீவிரமடைந்திருக்கும் இந்த நிலையில் இன்று மேற்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 26 வயது இளைஞன் இந்த நோய் கண்டு இறந்த முதல் நோயாளியாக இங்கு பதிவாகி இருக்கின்றார். மேலும் வாசிக்க

00000000000000000000000000000000000000000000000000000000000000

சிட்னியில் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று இருக்கும் நூலகமான தமிழ் அறிவகம் நாளை யாழ் நூலக எரிப்பு நினைவாக வருடாந்தம் நடாத்தும் கொடித்தின நிகழ்வை நடத்த இருக்கின்றது. இதுகுறித்த மேலதிக விபரம் அறிந்து கொள்ளவும், சிட்னியில் இருப்போர் இப்படி ஒரு நூலகம் இருப்பதே இப்போது தான் தெரியும் என்று உரிமை பாராட்டவும் இதோ நோட்டீஸ்

00000000000000000000000000000000000000000000000000000000000000000

MX என்ற பெயரில் மாலை நேரத்தில் ஒரு தினப்பபத்திரிகை வருகிறது இங்கே. ஓவ்வொரு நாளும் வேலை முடிந்து போகும் போது காலில் விழுந்தாவது வாங்கிக் கொண்டு போங்கோ என்று கெஞ்சுவாங்கள் பேப்பர் கொடுக்கிறவங்கள். ஓசி ஆச்சே ஒன்றுக்கு இரண்டாவும் வாங்கலாம். இங்கே சிட்னியில் குறைந்தது 50 போராட்டங்களாவது ஈழத்தமிழர் குறித்து நடந்திருக்கும், ஓவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதும் வேறு விஷயம். இந்த நிகழ்வுகளை எல்லாம் படம் பிடிக்காமல் செய்தி போடாமல் கள்ளக்காதலில் இருந்து விலாவாரியாக எல்லாக் குப்பையும் போடுறாங்களே என்ற ஆதங்கத்தில் ஈழத்தமிழர் போராட்டங்களைப் படம் எடுத்து செய்தியாகவும் கொடுத்திருக்கினம், ஒப்புக்கு ஒன்றை தேமோ என்று போட்டு விட்டு திரும்பவும் கள்ளக்காதல், புட்போல் என்று பழைய குருடி கதவத் திறவடி கணக்காய் சுழலும் இந்தப் பேப்பர் நேற்று ஒரு வரலாறு படைத்திருக்கிறது. பாலிவூட் குமரிகள் இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் பெஸ்டிவலுக்கு போன காட்சியில் எந்தக் குமரியின் பிளவுஸ் அழகு என்று இரண்டு பக்கப் போட்டோ மழை பொழிந்து ஜென்ம சாபல்யம் கண்டது.

000000000000000000000000000000000000000000000000000000000000000000


Peter Costello முந்திய லிபரல் கட்சி அரசில் நிதியமைச்சராக (treasurer) 11 வருஷங்கள் (1996 - 2007) வரை இருந்து கடைசிவரையும் பிரதமர் ஜோன் ஹாவார்ட் அண்ணன் திண்ணை எப்போது காலியாகும் என்று ஏங்கி இறுதிவரை அந்தப் பாக்கியம் கிட்டாமல் அடுத்த ரவுண்டில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தபோது லிபரல் கட்சியின் எதிர்க்கட்சி ஆசனம், சீ சீ இந்தப்பழம் புளிக்கும் கணக்காய் வேண்டாமென்று ஒதுங்கி இருந்தவர். எதிர்க்கட்சித் தலைவர் Malcolm Turnbull வயிற்றில் பால்வார்க்கும் கணக்காய் அடுத்த தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் அரசியலில் இருந்தே ஒதுங்கப் போகிறேன் என்று சொல்லும் இவருக்கு வயசு வெறும் 51 தான், அடுத்த பிறவியிலாவது 84 வயசு வரைக்கும் பதவியில் இருக்க இவர் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கிறோம்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000

வருது வருது இந்தா வருது என்று அடிக்கடி வெருட்டிக் கொண்டே இருக்கும் பொருளாதார வீழ்ச்சி அப்படியொன்றும் அமெரிக்கா கணக்காய் அவுஸ்திரேலியாவில் தாக்கவில்லை. ஆனாலும் வேலையிடங்களில் இதைச் சாக்காக வைத்து களையெடுப்புக்கள் நடப்பது தவிர்க்க முடியாத விஷயம் (ஆளாளுக்க்கு மேசைக்கு கீழ் ஒளிஞ்சிருக்கணும் போல). ஆனாலும் வருமுன் காப்போம் (வந்த பின்னால் தவிப்போம்)கணக்காய் எமது அவுஸ்திரேலிய பிரதமர், வருடச்சம்பளத்தில் ஒரு எல்லைக்கு குறைவான சம்பளம் பெறுவோருக்கு 900 அவுஸ்திரேலிய டொலர்களைக் கொடுத்து ஏதாவது வாங்குங்கள் என்று ஏழை பாழைகளைக் குளிர்வித்தார் என்று பார்த்தால் பாடையில் போனவனையும் அவர் விட்டுவைக்கவில்லை. இந்த உபகாரப்பணம் பல்லாயிரம் இறந்து போன அவுஸ்திரேலியக் குடிகளுக்கும் போய்ச் சேர்ந்திருக்காம் மேலும் படிக்க

ஆனாலும் ஒன்று தேர்தல் எல்லாம் முடிஞ்சு ஒரு வருஷத்துக்குப் பிறகு இவர் இந்த உபகாரத்தைக் கொடுத்தார், கையில காசு பாலெட்டில் (ballot ) ஒட்டு என்ற கணக்காய் இல்லை என்பதைக் கூறிக் கொள்கிறோம்.

இப்படியான உபகாரத்தால் தற்போது நிலவிவரும் பொருளாதார மந்த நிலையை கெவின் ரட் அரசு நன்றாகக் கையாளுக்கின்றது என்று மிஸ்டர் பொதுஜனம் கருத்துக்கணிப்பொன்றில் அள்ளி அள்ளி வாக்குச் சொல்லியிருக்கு.

ஆனாலும் இந்த மனுஷனுக்கு அஷ்டமத்துச் சனி போல, இவரது சொந்த மாநிலத்தில் இருக்கும் கார் வாங்கி விற்கும் ஒருவருக்கு சலுகை காட்டியது என்ற புகாரில் அவரை இந்தக் குளிரிலும் ட்ரவுசரை உருவுகிறார்கள் எதிர்க்கட்சிக் கோமகன்கள். மேல் விபரங்களுக்கு

இவர்களை தமிழகத்துக்கு அழைத்துச் சென்று அரசியல் அறிவு புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு பிரதமர் கெவின் ரட்டின் சாதகத்தை டி.ராஜேந்தரின் குறள் டிவியில் காட்டுமாறும் கேட்டுக் கொள்கின்றோம். குறள் டிவியின் துல்லியமான சாதகத்துக்கு ஒரு சோறு பதம்

நாளை ஐ.நா சபையினால் உலக அகதிகள் நாள் கொண்டாடப்படுகின்றதாம், ஹாஹாஹா என்னால சிரிப்பை அடக்க முடியல. இந்த ஜோக்கை கேட்டு சிரிச்சுக் கிட்டே இருங்க அடுத்த அவியல் வரை என்று கேட்டுக் கொண்டு விடைபெறுவது ;-)

Tuesday, 7 April 2009

சிட்னி முருகன் தேரோட்டம் 2009

சிட்னியின் வைகாசிக்குன்றில் (Mays Hill) எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கு வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இன்று சிறப்பாக ரதோற்சவ நிகழ்வு நடைபெற்றது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து சிறப்பித்த இந்தப் பெருவிழாவிற்கு வருண பகவானும் மெல்ல ஒதுங்கி வழிவிட, சூரியன் தன் மத்திம வெப்பத்தைக் கொடுக்க, வாயு பகவான் ஏஸிக்காற்றை மெல்ல மிதக்கவிட்டது இந்தப் பக்திச் சூழ்நிலைக்கு மேலும் அணி சேர்த்தது.

இந்த நிகழ்வின் முக்கியமான சில காட்சிகளை என்னோடு வந்திருந்த கமராப் பெட்டி களவாடி உங்கள் முன் ஒப்புவிக்கின்றது இதோ

தேரோட்டத்துக்கு முன் ஆலயத்தின் வசந்த மண்டபத்துள்ளே நிகழும் பூசை புனஸ்காரங்கள்
சுவாமி உள் வீதி வலம்
அடிவாங்கக் காத்திருக்கும் தேங்காய் கூட்டம்

ஆலயத்தின் ஒருபக்க வீதி, ஆலயத்தின் உள்ளே சென்று வழிபடமுடியாதவர்களுக்கு இந்தப் பக்கம் இருந்து உள்ளே நடப்பதைப் பார்க்க வசதி
தேர் ஏற வரும் வள்ளி, தேவசேனா சமேத முருகப் பெருமான்




காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே முருகா ஆட்டத்திலே
நேற்று இரவு ஓடிக் களைத்து ஒதுங்கி நிற்கும் சப்பரம்
மோரும், சர்பத்தும் கலந்துனக்கு நான் தருவேன்
ஈழத்தில் இருந்து வந்த நாகேந்திரன், அமரர் தட்சண மூர்த்தி மகன் உதயசங்கர் குழுவினர்
தேரோட்டம் காண வாருங்கள்

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

பக்தர் கூட்டம், ஆறிலிருந்து அறுபது வரை

ஆங்கே வயிற்றுக்கும் கூட ஈயப்படும்
இருப்பிடம் வந்த தேரில் இருக்கும் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கியூ கட்டி நிற்கும் கூட்டம்
இது சாப்பாட்டு கியூ

சுவாமிக்கு பச்சை சாத்தி ஆற்றுப்படுத்தல்

இத்தோடு முடிந்தது, கூட்டம் கலையலாம் :)