Sunday 25 March 2007

பக்தி

பார்க்கிங் பிரச்சனையும்
பட்டுப்புடவை பார்டரும்
பட்டாணி சுண்டலும்
குருக்கள் தோடும்
நாதஸ்வரத்தார் கழுத்து நரம்பும்
சாம்பிராணி நெய்ப்புகையும்
கடந்து
அடுக்கு விளக்கு
ஆராதனையில்
தேடத்
தெளிவதே
கடவுள்.
----------------------
சிட்னி முருகனுக்கு

2 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

:O)

தோசைக் கடையை மறந்திட்டீங்க போலருக்கு!!

கானா பிரபா said...

நல்லாயிருக்கு,

பிரசாதக் கியூவையும் சேர்த்துவிடுங்கோ ;-)