Saturday 6 October 2007

சிட்னியில் "அண்ணை றைற்"



ஈழத்தின் புகழ்பூத்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் தனி நடிப்பு நாடகங்களின் இறுவட்டு வெளியீடு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பரமற்றா நகர மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. சிட்னியின் முதல் தமிழ் வானொலி "தமிழ் முழக்கம்" தனது 15 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிறப்பு நாளில் இந்த நிகழ்வு அரங்கேறவுள்ளது.

உலகத்தின் ஒரு அந்தத்தில் இருக்கும் கனடாவிலும், மறு அந்தத்தில் இருக்கும் அவுஸ்திரேலியாவிலும் ஒரே நாளில் இந்த நிகழ்வு நடைபெறுவது இன்னும் சிறப்பானதொரு விடயம். கனடா வாழ் அன்பர்களுக்காக இந்நிகழ்வு கனடாவில் நடைபெறும் மாற்றப்பட்ட புதிய இடம் குறித்த விபரங்களையும் இப்பதிவில் கொடுத்திருக்கின்றேன்.

மேலதிக செய்திகளும், நிகழ்வுப்படங்களும் பின்னர் வரும்.

No comments: